Saturday, 28 January 2012

வாங்கைய்யா வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

இணையத்தினூடே இவ் இடம் வந்து ஈழவயலில் இளைப்பாற வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள், 
செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். 

Thursday, 26 January 2012

பால் ரொட்டியும், பாட்டி தந்த அடியும்!

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் எல்லோருக்கும் அன்பு வணக்கம்! மீண்டும் மற்றுமொரு பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

”சமையல் பதிவுகளை எழுதுவதில் விரும்பமே இல்லை” என முதல் பதிவில் பீற்றியவள் மீண்டும் ஒரு சமையல் பதிவு எழுதுகிறாளே என நீங்கள் நினைக்கக்கூடும். ”அப்பப்ப தொட்டுக்க ஊறுகாய் போல..” எமது ஈழத்தின் வாழ்வியலோடு கலந்து விட்ட சில உணவுப் பண்டங்கள் பற்றிய விடயங்களை ஈழவயலுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என சில சொந்தங்கள் கேட்டதால் இதனை எழுதுகின்றேன். சமையலையும் தாண்டி இந்தப் பதிவில் தமிழர்களின் விசேட தினங்களில் பண்ணப்படும் (செய்யப்படும்) முக்கியமான ஒரு பலகார வகை பற்றி குறிப்பிடப் போகின்றேன். இது அவ்வளவு ருசியானதொரு பண்டமல்ல. ஆனால் கட்டாயம் இருக்க வேண்டிய பண்டம்.

Tuesday, 24 January 2012

விளையாடும் போது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்த ஒருவர்!

பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம்.

Thursday, 19 January 2012

பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகமும், கட்டுடல் மேனிகளும்!

இணையத்தில் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் ஈழவயலைப் படிக்க வந்திருக்கும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்;
ஈழவயலில் எனது முதற்பதிவு இது.
ஏற்கெனவே "வரோ" அவர்கள் எழுதிய கோயில்த்திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும் என்ற பதிவின் அடுத்த பாகமாகக் கூட நீங்கள் இந்தப் பதிவைப் பார்க்கலாம். கலாச்சார காவலர்கள் யாராச்சும் அவசரக்குடுக்கை தனமாக பதிவினை முழுமையாகப் படிக்காது, போர்க் கொடி தூக்குவதனை விடுத்து, கொஞ்சம் நிதானமாக இப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனை ஆராய்ந்து பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? திருவிழாக்களில் இளையோர் பட்டாளத்தின் திருவிளையாடல்களைப் பற்றிய பல விடயங்களை வரோ அவர்கள் தனது பதிவில் பொதுவாக கூறியிருந்தார். இப் பதிவினூடாக சில அனுபவப் பகிர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து களமிறங்குகிறேன்.

Wednesday, 18 January 2012

ஈழத்தின் மிக அ(பெ)ரிய வளம் - இரணைமடுக் குளம்!

ஈழ வயலினூடே இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்;
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளம் இரணைமடுக் குளம் பல வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் குளம் ஈழத்தின் புகழ் பூத்த குளங்களில் ஒன்று.
ஊரில் இருக்கும் போது இரணைமடுக் குளம் வான் பாயுது என்றால் ஏதோ திருவிழாக்களுக்கு போவது போல போய் பார்ப்போம். அவ்வளவு அழகாக இருக்கும். இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டால். வன்னியில் யுத்தம் ஏற்பட்ட காலத்திலும் சரி தற்போது யுத்தம் முற்றாக ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள போதும் சரி கிளிசொச்சிக்கு வருகின்றவர்கள் ஒரு முறை சென்று பார்க்கும் இடம் இரணைமடுக் குளம்.

Sunday, 15 January 2012

கரடியோட சண்டைபோட்ட அப்பு - அதிர்ச்சியூட்டும் அந்த நாள் அனுபவம்!


எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக் காலத்தில் எனக்கு அலாதி பிரியம். எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு ஏதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.


ஆச்சிக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியுமென சிறு வயதில் நானும், நண்பர்களும், சித்தி பையனும், மச்சாளும் பலதடவைகள் வியந்திருப்போம்.

Friday, 13 January 2012

தைப்பொங்கல் - சிறுவர் பாடல்


தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர

கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க

வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்

கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ

பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்

தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக

----
மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி, விடை பெற்றுக் கொள்வது;
மன்னார் அமுதன்
நன்றி,
வணக்கம்.
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Thursday, 12 January 2012

அன்றும் இன்றும் என்றும் - பொங்கல்

ஈழவயலோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்;
வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் - கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்
---

கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவனாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனை வகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என் நாவில் வந்தமர் வாய். 

ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்

Sunday, 8 January 2012

ஆமத்துறூ வெட்டும் அந்த நாள் நினைவுகளும்!

வாழும் காலத்தில் வண்ணத் தமிழ் மொழியால் இணையத்தில் வலம் வரும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குழை போடும் காட்டானின் இனிய வணக்கம்;
நேற்று குடும்பத்தோட லாச்சப்பலுக்கு போனேன்.நாங்கள் அங்கு போகும்போது கன வேலைகளை ஒரே நேரத்தில செய்திடுவம். மனிசி சிலோன் மரக்கறிகள் வாங்க ஒரு பக்கம் கிளம்பினால், நானும் பிள்ளைகளும் ஊருக்கு காசனுப்பிட்டு அப்பிடியே மூணு பேரும் முடி வெட்ட கிளம்பிடுவம் . ஏனோ தெரியல! ஊரில ஒரே கடையில மயிர் வெட்டியது போல இங்கேயும் நான் அப்படிதான். கல்யாணம் கட்ட போகேக்க கூட நான் வழமையா போகும்   அந்த கடைக்குத்தான் போய் என் மொட்டைய மறைக்கிற மாதிரி முடி வெட்ட சென்றிருக்கேன். 

Wednesday, 4 January 2012

ஈழ தேசத்தில் கான ஸ்வரமிசைத்த நாதஸ்வர வித்துவான்!

ஈழ வயலோடு இணைந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,
அரிவரி தொடங்கி, கைதேய மண் மீது அகரம் எழுதத் தொடங்கிய காலங்களிற்கு முன்பாகவே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்து விடுகின்றது. கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்து வரும் போது, என் இயல்புகள் அத்தனையையும் தொலைத்து விட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகம் பாய சிலிர்துப் போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலயித்த சம்பவங்கள் பல உள்ளன.

Monday, 2 January 2012

கிளிநொச்சியில் கோடைக்கு குளிர்ச்சியூட்டிய காமதேனு!

ஈழ வயலின் இன்றைய பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் குட்டிப் பையனின் இந் நேர வணக்கங்கள்;
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று.
இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்!

Sunday, 1 January 2012

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் நம்ம ஊர் வடகம்!

இணையத்தினூடாக உங்கள் இல்லம் நாடி வந்து ஈழக் கதைகளைப் பேசும் ஈழ வயலூடாக புதியதோர் ஆண்டில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
எனக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி. முதலாவது 2012ஆம் ஆண்டில் ஈழ வயலுக்காக பதிவெழுதும் முதல் பதிவர் நான். இரண்டாவது, "ஆல் போல் வேர் ஊன்றுவதற்காக வளர்ந்து வரும்" ஈழவயலின் முதல் பெண் பதிவர் என்ற பெருமையும் எனக்கே!

“பெண் பதிவர்கள் என்றாலே கவிதையும், சமையலும் தான் எனப் பலர் கருதும் பதிவுலகில்; இந்தக் குந்தவையும் என்ன விதிவிலக்கா?” என நீங்கள் நினைத்தால் இப்பொழுதே அந்த எண்ணத்தினை மறந்து விடுங்கள். எனக்கு இவை இரண்டையும் சுத்தமாகவே பிடிப்பதில்லை. இந்தப் பதிவில் சமையலையும் தாண்டி ஈழத்தின் உணவு முறையும், எங்கள் ஊர் ஞாபகங்களும் கலந்து இருக்கின்றது.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!