Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, 21 March 2012

மெல்லத் தமிழ் இனி (அச்)சாகும்!

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை. இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்" என கூறிக்கொண்டனர்.

Saturday, 31 December 2011

விபரீத நிலையினை நோக்கிச் செல்லும் தமிழர்களின் விளையாட்டுக்கள்!

இணையத்தில் உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே; வணக்கம்,
சர்வதேச ரீதியில் இடம் பெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழாமில் தமிழ் வீர, வீராங்கனைகளின் பங்களிப்பு என்ன? தேசிய ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பங்குபெறும் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு என்ன? (இங்கு “தமிழ்” - “தமிழர்” என்று பயன்படுத்தும் போது மொழியால் ஒன்று பட்ட அனைத்து இலங்கைத் தமிழர்களுமே உள்ளடங்குவர்)

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!