Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, 26 March 2012

நாதம் அடங்கிய ‘வானொலிக்குயில்’ ராஜேஸ்வரி சண்முகம்!

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அணைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
மண்ணில் மனிதர்களாக பிறக்கும் எல்லோரும் ‘மாணிக்கங்கள்’ ஆகிவிடுவதில்லை. மனிதரில் மாணிக்கமாக திகழ்ந்த ஒருவரைப் பற்றித்தான் இப்பதிவில் கதைக்கப் போகின்றேன்.

Sunday, 18 March 2012

செத்தவீட்டில் சந்தோசப்படலாமா?

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் இந்தக் குந்தவையின் அன்பு வணக்கங்கள்!

Friday, 3 February 2012

சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்


காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
                 
                          ஆக்கம்: -- மன்னார் அமுதன்

Saturday, 31 December 2011

விபரீத நிலையினை நோக்கிச் செல்லும் தமிழர்களின் விளையாட்டுக்கள்!

இணையத்தில் உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே; வணக்கம்,
சர்வதேச ரீதியில் இடம் பெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழாமில் தமிழ் வீர, வீராங்கனைகளின் பங்களிப்பு என்ன? தேசிய ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பங்குபெறும் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு என்ன? (இங்கு “தமிழ்” - “தமிழர்” என்று பயன்படுத்தும் போது மொழியால் ஒன்று பட்ட அனைத்து இலங்கைத் தமிழர்களுமே உள்ளடங்குவர்)

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!