Saturday, 31 December 2011

விபரீத நிலையினை நோக்கிச் செல்லும் தமிழர்களின் விளையாட்டுக்கள்!

இணையத்தில் உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே; வணக்கம்,
சர்வதேச ரீதியில் இடம் பெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழாமில் தமிழ் வீர, வீராங்கனைகளின் பங்களிப்பு என்ன? தேசிய ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் பங்குபெறும் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு என்ன? (இங்கு “தமிழ்” - “தமிழர்” என்று பயன்படுத்தும் போது மொழியால் ஒன்று பட்ட அனைத்து இலங்கைத் தமிழர்களுமே உள்ளடங்குவர்)

Friday, 30 December 2011

உன்(ண்)னானைச் சொல்லுறேன்! உவள் சிவப்பியைத் தான் கட்டுவேன்!

ஈழவயலோடு இன்பத் தமிழ் மொழியூடாக இணைந்திருக்கும் அன்புத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் விண்ணாணம் விநாசியாரின் வணக்கம், 
என்ன தான் இருந்தாலும் பாருங்கோ. வயசான கிழடுகளுக்கு அந்த நாள் ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் போது கிடைக்கிற சுகம் மாதிரி ஏதும் வருமேங்கோ? தமிழர்களின் பண்பாட்டில் லுக்கு விடுறதுக்கும், எனக்கென்று ஒருத்தியை பள்ளிக் கூடத்தில படிக்கும் போது புக்குப் (Booking) பண்ணி வைக்கிறதுக்கும் நாங்கள் எப்பனும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆறாங் கிளாஸ் படிக்கும் போதே நிரூபிக்கத் தொடங்கிடுவம் பாருங்கோ.  என்னோட வாழ்க்கையில வந்து போன சிவப்பியளைப் பற்றி நான் சொல்லத் தொடங்கினால் உங்களுக்கே அலுப்படிக்கத் தொடங்கும் பாருங்கோ. 

Tuesday, 27 December 2011

பனம் பழமும் பசுமையான நினைவுகளும்!

ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்களே,
வணக்கம்,
உங்கள் ஈழ வயலில் மீண்டும் ஒரு பனங்காய் பதிவு:
"பனம் பழம்"என்றவுடன் உங்கள் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறுகிறதா?வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பனம்பழத்தை ரசித்திருந்தால் கட்டாயமாக எச்சில் ஊறி இருக்கும்."எட்டாக்கனி புளிக்கும்" என்பார்கள்.உண்மையில் நகரவாசிகளாகிவிட்ட எங்களுக்கு பனம் பழம் எட்டாக்கனி தான். ஆனால் புளிப்பு அல்லது ஒரு விதமான இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளின் கலவை தான் இந்த பனம்பழம். பனைமரம் இல்லாத ஊர்களைக் காணக் கிடைப்பது அரிது இலங்கையின் வட கிழக்கில்.
Borassus ake-assii MS 1315.JPG

Monday, 26 December 2011

வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!!

இணையத்தினூடே ஈழவயலினூடு இணைந்திருக்கும் அன்பு உறவுகளே,
வணக்கம்,
யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். (இந்தியாவில் இதை காற்றாடி என்பார்கள்). சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதற்கு இறங்கி விடுவார்கள்.

Sunday, 25 December 2011

தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

ஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா? என்று நான் அடிக்கடி என்னுள் கேள்வி கேட்பதுண்டு! சில சமயங்களில் நாம் உயர்ந்த இனமாகவும், சில சமயங்களில் ஏதோ சில காரணங்களால் நாம் பின் நிற்பதாகவும் தோன்றுகிறது! இதுகுறித்து உங்களுடன் கலந்துரையாடினால் தான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்! 

Saturday, 24 December 2011

சிலோன் பொப் இசையும் சிந்தையுள் நிற்கும் நினைவுகளும்!

இணைய வலையினூடே ஈழவயலோடு இணைந்திருக்கும் சொந்தங்களுக்கு வணக்கம், 
பொப் எனும் இசை வடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த வகையில் இலங்கை 1505ம் ஆண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை போர்த்துக்கேயர்களால் ஆளப்பட்டது. அந்தக் காலங்களில் இலங்கையில் வாழ்ந்த இந்து, பௌத்த சமயங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் எனப் போர்த்துக்கேயர் ஆணை பிறப்பித்திருந்தனர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். 

Thursday, 22 December 2011

திருட்டு மாங்காயும், வெ(சு)ருட்டல் நினைவுகளும்!

ஈழவயலில் இணைந்திருக்கும் ஐயா, அம்மா, தம்பிங்க, தங்கைங்க மற்றும் அனைவருக்கும் இந்தக் காட்டானோட வணக்கமுங்க! 
சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எங்களுக்கு அந்த நேரத்தில் பெற்றோரிடம் கண்டிப்பும், தண்டனையும் பெற்று தந்தாலும் பிற் காலத்தில் அச் சம்பவங்களை நினைக்கும்போது வரும் இனம்புரியாத சந்தோசத்திற்காகவே 'இன்னும் அதிக குளப்படிகள் செய்திருக்கலாமோ!' என்று எண்ணிப் பார்க்க வைக்கும் இயல்பு கொண்டவை. இவையெல்லாம் எவ்வளவு உண்மைன்னு அனுபவித்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் கேளுங்கள். வீட்டை சுத்தி மாமரமும் விளாத்தி, இலந்தை, நாவல் போன்ற மரங்கள் இருந்தாலும். அடுத்தவன் தோட்டத்துக்குள் வேலி பாய்ஞ்சு அங்கே புடுங்கி தின்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் கிடைப்பதில்லை..தனியாக பி(பு)லத்துக்கு வரும் மத்தியான நேர கிளி போல போவதைக் காட்டிலும் நண்பர்களோடு சேர்ந்து திருட்டு மாங்காய் அடிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான் போங்கள்..!!

மார்கழியின் மகிழ்ச்சியும் சுமணா அக்காவின் கைப்பக்குவமும்!

வணக்கம் உறவுகளே; ஈழவயலில் இது எனது முதற் பதிவு என்பதால் சுமாராய் இருந்தாலும் சூப்பர் என சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்... ஹே..ஹே..

எமது சமய பண்பாட்டு கலாச்சார முறைமைகள் எமக்கு பல வகையான விடயங்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிறுவர் முதல் முதியவர் வரை தங்கள் கஷ்டம் துன்பங்களை மறந்து ஒரு சந்தோஷ, களியாட்டமாக மனங்களை மாற்றுவதற்கு இந்த பண்டிகைகள் மிகவும் முக்கியமானவை. தேவையானவையும் கூட. அந்த பண்டிகைகள் சமயம் சார்ந்ததாகவோ அல்லது கலாச்சாரம் சார்ந்ததாகவோ அல்லது எங்கள் தமிழ் பண்பாடு சார்ந்ததாகவோ இருக்கலாம். இந்த பண்டிகைகளுக்காக நாம் செலவு செய்யும் பணம் தொடங்கி நேரம், சந்தோசம் வரை அனைத்தும் அதிகம். இந்த பண்டிகைகளிலே ஒரு விசேடத்துவம் இருக்கிறது பாருங்கள். பண்டிகை என்றதும் இரண்டு கருத்தியல் விடயங்கள் எங்கள் மனங்களில் வரும். ஒன்று பண்டிகைக்குரிய சம்பிரதாயங்கள்,அடுத்தது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு விடயங்கள். நம்மவர்கள் எல்லாம் இந்தப் பண்டிகைகளில் கேளிக்கைகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இந்த சம்பிரதாயங்களிற்கு கொடுப்பது குறைவு. 

Tuesday, 20 December 2011

சொல்லுக்குச் சுதி சேர்த்த வில்லுப் பாட்டு!

ஈழ வயலினைத் தரிசிக்க வந்திருக்கும் தமிழ் இதயங்களுக்கு இனிய வணக்கம்!
வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே! எம் பால்ய காலத்தில் பள்ளியில் படிக்கையில், கோவில் திருவிழாக்களில், பொது நிகழ்வுகளில் இந்த வில்லுப் பாட்டினைக் கண்டு ரசித்திருக்கும். ஏன் நாங்களும் சில வேளை வில்லில் சுதி சேர்த்துப் பாடியிருப்போம் அல்லவா? வில்லுப் பாட்டு என்பது எவ்வாறு ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் சின்ன ஒரு நினைவு மீட்டலுக்காய் இவ்வாறு தான் ஆரம்பிக்கும் எனக் கூறிக் கொள்கின்றேன்.
தந்தனத் தோம் என்று சொல்லியே..
வில்லினை (வில்லிசை) பாட வந்தருள்வாய் கணபதியே..!
வரம் தந்தருள்வாய் கணபதியே!(கணபதியை விரும்பின மாதிரி நீங்கள் ஸ்ருதி மாற்றிப் பாடிக் கொள்ளவும் முடியும்)!

கோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்!

இணையத்தில் இறக்கை விரித்து பறந்து கொண்டிருக்கும் ஈழவயலில் அடியேன் எழுதும் முதல் பதிவு இது. ஈழ வயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!
”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி....

Monday, 19 December 2011

சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!

ணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே!
எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி!

Sunday, 18 December 2011

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?

Thursday, 15 December 2011

பனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்!

ஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்!
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"
பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

Wednesday, 14 December 2011

கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்!

வணக்கம் உறவுகளே! 

என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். 
நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

Tuesday, 13 December 2011

சிவப்பு நிற பலாச்சுளை தெரியுமா உங்களுக்கு?

ழவயலின் சொந்தங்களுக்கு இந்த ஈழத்துப் பூதந்தேவனாரின் அன்பு கலந்த வணக்கங்கள்! அனைவரும் நலம் தானே உறவுகளே!

தமிழிலே பல அணிகள் இருக்கின்றன! அதிலே எனக்கு மிகவும் பிடித்தது உவமை அணி! எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்திருக்கும்! அது என்ன உவமை அணி? தெரியாத ஒரு விஷயத்தை, தெரிந்த ஒரு விஷயத்தைக் கொண்டு விபரிப்பது உவமை அணி என்று இலக்கணம் சொல்கிறது!

Monday, 12 December 2011

இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்!

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே!
எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!