Monday 27 February 2012

ஊர்ப்பெயர்களின் பின்னால் உள்ள சுவாரசியங்கள்

இணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் மீண்டும் ஒருமுறை இந்தக் குந்தவையின் வணக்கங்கள்.

நான் ஈழவயலுக்காக எழுதிய இரண்டு பதிவுகள் ‘சமையல் பதிவுகள்’ ஆகிவிட்டன. இந்தமுறை எப்படியாவது அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். நிறைவேற்றியும் விட்டேன். இனி குந்தவையை எவரும் ‘சமையல்காரி’ என அழைக்க மாட்டார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.

Sunday 12 February 2012

நம்மவூரு கிளித்தட்டு / தாச்சிப்போட்டி / யாடு

இணையவெளியூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

கிரிக்கட், கால்பந்து போல யாவருக்கும் பொதுவான விளையாட்டுக்கள் அல்லாமல் தமிழர்கள் மட்டுமே விளையாடும் பல விறுவிறுப்பான விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் விளையாடும் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவையனைத்தையும் ஆராய்ந்து பார்த்தோமானால் நிச்சயம் அவை எமது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வைத் தருபவையாகத்தான் இருக்கும்.

Friday 3 February 2012

சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்


காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
                 
                          ஆக்கம்: -- மன்னார் அமுதன்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!