Wednesday 7 November 2012

மூத்த மகன்


நான்
யாராய் இருந்திருப்பேன்
அக்காவின் உலகில்


பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்


தெருச்சண்டைகளில்
எனக்காய் வாதிட்டவள்


பாவாடை மடிப்புகளில்
எனைப் பாதுகாத்து
அப்பாவின் பிரம்படிகளை
அவளே வாங்கியவள்


பந்திகளில் முந்தி
எனக்காய்
பலகாரம் சேமித்தவள்


கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
மீசை வைக்கச் சொன்னவள்


அவள் உலகில்
யார் யாராகவோ
நான்


யாருடைய உலகிலும்
தம்பியாக முடியாமல்
மூத்த மகன்
                             -- மன்னார் அமுதன்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமை...

பொறுப்புக்கள் அதிகம்...!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!