இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..
"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!
மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!
மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!
சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!
மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"
சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
மைந்தன் சிவா.
|
7 comments:
அருமை தானாகத் திருந்துவாஎகள் என்று தெரியவில்லை
நாங்கள் போட்ட வேலிகளை நாங்களேதான் அகற்றவேண்டும். மேடையிலும் பொதுவாழ்விலும் சாதியத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் எத்தனைபேர்களது நிஜமுகங்கள் கோரமானதாக இருப்பதை பார்த்து வேதனைப்படத்தான்முடிகிறது. நல்ல கருத்தை பதிவிட்டதற்கு நன்றி சிவா.
வணக்கம் மைந்தரே!!!நலமா?"நம்மை நாமே திருத்திக் கொண்டால் உலகம் தானாகவே திருந்தி விடுமாம்",ஹ!ஹ!ஹா!!!!!!!
வணக்கம் நண்பரே,
இங்கே யோகா ஐயாவின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நம் மனத்தில் இருக்கும் சாதீய அழுக்கை முதலில் களைந்து
இந்த சமுதாயத்தை உற்றுநோக்குவோம்..
சாதீயம் புற்றீசலாய் வரைந்து மிரட்டும் இந்த சமுதாயத்தில்
முதல் பங்கை நம்மில் இருந்து ஆரம்பம் செய்வோம்..
அருமையான கவிதை..
சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!//நல்ல கருத்து
வணக்கம் அம்பலத்தார் அவர்களே நானும் ஈழவயலில் தும்பி பிடித்து விளையாடியவள் காலம் செய்த கோலம் இப்போ நான் எங்கோ இருக்கிறேன். எழுத்துக்களில் ஈழமணம் கமழ்கின்றது.
மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!
Post a Comment