Friday 15 February 2013

அழுக்குக் குறிப்புகள்

(ழுக்)குக் குறிப்புகள்

கிழிசல் உடைகள்
வெட்டாத நகங்கள்
மூக்கு முடிகளென
எங்கும் அழுக்கு

பெருவிருட்சத்தின் 
விழுதுகளாய்
தொங்கிக் கிடக்கிறது 
சடையும் தாடியும்

வெட்டப்பட்ட விரல்கள்
சீழ் வடியும் புண்களென
நெளிந்து கிடக்கிறது
அவன் அன்றாடம்

குடலைக் குமட்டும்
அழுக்குகளின் 
திரட்சியாய் அவன்..

விலகிக் 
கடந்து செல்கையில்
அழுக்காகி விடுகிறது மனசு

காவிப்பல் தெரிய 
நட்பாய் சிரிக்கையில் 
அழகாகிவிடுகிறான் அவன்...
             
                -- மன்னார் அமுதன் 

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!